திருநெல்வேலியிலிருந்து அரசு பேருந்து நாகர்கோவில் நோக்கிப் புறப்பட்டது. இந்த பேருந்தில் சீருடையில், ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் உட்படப் பலர் பயணித்தினர். பேருந்தின் நடத்துனரமேஷ் அனைவரிடத்திலும் பணத்தை வசூலித்து பயணத்துக்கான ரசீதுகளை வழங்கி வந்தார். இதற்கிடையே, ஆயுதப்படை காவலர்களிடம் பயண ரசீதை வழங்கப் பணம் கேட்டுள்ளார் ரமேஷ். ஆனால், தாங்கள் அரசு வேலைக்காகப் பயணிக்கும் வாரண்ட் உள்ளதாகக் காவலர்கள் பதிலளித்துள்ளனர். இதையடுத்து ரமேஷ், சரி அந்த வாரண்ட்டை என்னிடம் காண்பிக்கவும் எனக் கூறியுள்ளார். காண்பிக்கிறோம் என்ற வகையில் பதிலளித்த காவலர்கள், நேரம் கடந்தபோதும் ரமேசிடம் அதை காட்டவில்லை.
அனைவருக்கும் பயண ரசீதை வழங்கியபின், காவலர்களிடம் வாரண்ட்டை காண்பிக்கக் கோரினார். ஆனால், காவலர்கள் நடத்துநர் ரமேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் பேச்சு வழக்கில், ரமேஷ் அவர்களைப் பன்மையில் ‘மயிறு’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் பெரிதாகி, அந்த காவலர்கள் நடத்துநரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
இந்த தாக்குதலால், நடத்துநர் முகத்தின் கண் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத நடத்துநர் ரமேஷ், பேருந்து ஓட்டுநரை காவல் நிலையம் செல்லும்படி அறிவுறுத்துகிறார்.
அரசுப் பேருந்தில் காவல் நிலையம் சென்ற நடத்துநர் ரமேஷ், காவலர்களை அங்குக் காண்பித்துத் தான் தாக்கப்பட்டது தொடர்பாகப் புகார் ஒன்றையும் பதிவு செய்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப் பதிவு செய்தவுடன், காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் சொந்த பிணையில் பெற்று வீட்டுக்குச் சென்றனர். இந்த விவகாரம் குறித்துக் காவல் நிலையம் செல்லும் வழியிலே ஒரு வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்.
அனைவருக்கும் பயண ரசீதை வழங்கியபின், காவலர்களிடம் வாரண்ட்டை காண்பிக்கக் கோரினார். ஆனால், காவலர்கள் நடத்துநர் ரமேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் பேச்சு வழக்கில், ரமேஷ் அவர்களைப் பன்மையில் ‘மயிறு’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் பெரிதாகி, அந்த காவலர்கள் நடத்துநரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
இந்த தாக்குதலால், நடத்துநர் முகத்தின் கண் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத நடத்துநர் ரமேஷ், பேருந்து ஓட்டுநரை காவல் நிலையம் செல்லும்படி அறிவுறுத்துகிறார்.
அரசுப் பேருந்தில் காவல் நிலையம் சென்ற நடத்துநர் ரமேஷ், காவலர்களை அங்குக் காண்பித்துத் தான் தாக்கப்பட்டது தொடர்பாகப் புகார் ஒன்றையும் பதிவு செய்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப் பதிவு செய்தவுடன், காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் சொந்த பிணையில் பெற்று வீட்டுக்குச் சென்றனர். இந்த விவகாரம் குறித்துக் காவல் நிலையம் செல்லும் வழியிலே ஒரு வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்.