ஆப்நகரம்

ஈரோட்டில் 630 சிறுமிகள் கர்ப்பம்... ஆடிப்போன அதிகாரிகள்... அதிர வைத்த ரிப்போர்ட்..!

கரு முட்டை விற்பனையில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Jun 2022, 3:47 pm
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை சட்ட விரோதமாக விற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு எப்போது சீல் வைக்கப்படும் என்று தெரியாது. ஆனால், சம்மந்தப்பட்ட துறை அப்படி செய்யுமா? என்ற கேள்வி எழுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியே புகார் கொடுக்கவில்லை என்றால் இந்த சம்பவம் மட்டுமல்ல ஈரோட்டில் இதையொட்டி நடந்து வரும் குற்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்கின்றனர் அதிகாரிகள்....
Samayam Tamil erode little girl egg donation case
erode little girl egg donation case


ஈரோட்டில் பெரிய பெரிய மெடிக்கல் மாஃபியாக்கள் சிறுமிகளின் சினை முட்டையை வேட்டையாடி வருகிறதாம்... மறுபக்கம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாகுவது ஈரோடு மாவட்டத்தில் சர்வ சாதாரணம் என்கின்றனர்... இதுதொடர்பாக குழந்தை நல அதிகாரி வெளியிட்ட தகவலில், சிறுமியின் கருமுட்டை விவகாரம் குறித்து விசாரித்தபோதுதான் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரை 600க்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமாகி இருப்பது தெரிய வருகிறது. இதில், 10 சதவீதம் பேர் கூட புகார் கொடுக்கவில்லை என்பதுதான் உச்சகட்ட சோகம்... சிறுமிகளை சீரழித்தவர்கள் வெளியில் ஜாலியாக உலவுகின்றனர் என அந்த அதிகாரி கனத்த குரலில் பதிவு செய்தார்...

விசாரணையின்போது பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கொடுத்த வாக்குமூலம் கேட்போரின் நெஞ்சை கசக்கி எடுக்கிறது... என் அம்மா பேரு இந்திராணி சார்... அப்பா சரவணன் சார்... எனக்கு மூணு வயசாகும்போதே எங்கம்மா அப்பாவை பிரிந்து சையது அலிங்கறவருகூட சேர்ந்து வாழுறாங்க.... நான் வயசுக்கு அந்த நாலு வருஷம் ஆகுது... வயசுக்கு வந்த நாளில் இருந்து சையது அலி எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துட்டு வராரு.. தப்பு தப்பா நடந்துக்குறாரு... இந்த வேதனையை அனுபவிச்சிட்டு இருக்கும்போதே ஈரோடு, ஓசூர், பெருந்துறைனு பல பிரைவேட் ஆஸ்பத்திற்கு என்ன சையது அலி கூட்டிட்டு போய் என்னென்னமோ டெஸ்ட் எடுத்தான்... எங்க அம்மாவும் இதுக்கு உடந்தையா இருந்துச்சி...

7 ஆண்டு காதலி 5 மாத காதலனுடன் ஓட்டம்... நண்பனிடம் மன்னிப்பு கேட்டு புதுமாப்பிள்ளை மரணம்

அடிக்கடி ஹாஸ்ப்பிட்டல்க்கு கூட்டிட்டு போய் வருவாங்க.... உடம்பு முடியாம போய்டுவேன்... இதனாலேயே படிப்பை 10 ஆம் வகுப்போடு நிறுத்திட்டேன்... எனக்கு படிக்கணும்னு ஆச... சையது அலி பல தடவை செக்ஸ் டார்ச்சர் கொடுத்துருக்கான்... அத அம்மாட்ட சொன்னபோது, ஒண்ணும் பண்ண முடியதுமா... ஏதாவது சொன்னா சையது அலி கொன்னே போற்றுவான் ''என சொல்லும்... என்ன ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போன அப்பறம் இவங்ககிட்ட லட்ச கணக்குல காசு சேர்ந்துடும்... ரொம்ப நாள் கழிச்சுத்தான் என்னோட சினை முட்டையை எடுக்குறாங்கனு தெரிய வந்தது.. இதுவரை 8 தடவை எடுத்துருப்பாங்க.... இனிமேல் இருந்தா உயிரே போய்டும் என பயந்துதான் என்னோட சொந்தகாரவங்க வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் சொன்னேன்.. அவங்க போலீஸ்ல புகார் கொடுக்க சொன்னாங்க...

அம்மா இந்திராணியும், சையது அலியையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் எனக்கு நிம்மதியா இருக்கு... இப்போ என் அடி வயிறு ரணமா இருக்கு மேடம்... மனசாலையும், உடலாலையும் ரொம்ப கஷ்ட பட்டுட்டேன்... எனக்கு நிறைய படிக்கணும்னு ஆச...'' என்று அந்த சிறுமி உருக்கமாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி