ஆப்நகரம்

கவர்ச்சி வலையில் வீழ்த்தி வாலிபர் கொலை... வாக்குமூலத்தில் வெளியான பகீர் சம்பவம்

திருவள்ளூர் அருகே இளம்பெண்ணின் காதல் மோசடியால் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Jun 2022, 3:39 pm
ஒரு தலை காதலால் நடந்து வரும் குற்ற சம்பவங்களுக்கு மத்தியில் முக்கோண காதல் விவகாரத்தில் வாலிபர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காதல் விவகாரத்தில் காவலர் ஒருவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை கிளப்புகிறது.
Samayam Tamil woman crime story


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த வாலிபர் மாரிமுத்து. இவருக்கு 27 வயதாகிறது. டிப்ளமோ படித்து முடித்துள்ள மாரிமுத்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன் மாரிமுத்து பழகியுளளார். மாரிமுத்துவிடம் பணக்கார பெண்ணாக காட்டிக்கொண்ட ராகினி மாரிமுத்துவை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். மேலும், தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி 5 லட்சத்தை மாரிமுத்துவின் வங்கி கணக்கு மூலம் மாற்றியுள்ளார்.

அதன் பிறகு ராகினி மோகினியை போல மாயமாகி மாரிமுத்துவிடம் இருந்த தொடர்பை துண்டித்துள்ளளார். அதன் பிறகு மாரிமுத்துவின் உறவினரான தென்காசி காவல்துறையில் சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை காவலராக பணியாற்றும் வில்வத்துரை என்பவரையும் ராகினி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இவரிடம் இருந்தும் ராகினி 15 லட்சம் வரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் ராகினியுடன் வில்வதுரை அவரது நண்பர் இசக்கிராஜா அவரது மனைவி இளவரசி மற்றும் ரவிக்குமார் ஆகியோர் பழக தொடங்கி நான்கு பேரும் மோசடி குழுவாக செயல்பட்டு 50 லட்சம் வரை இப்படி சுருட்டியுள்ளனர்.

கள்ளகாதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்... தூங்க வைத்து வெறி தீர்த்த காமுகன்...

இந்நிலையில், ராகினியிடம் கொடுத்து ஏமார்ந்த பணத்தை மாரிமுத்து வில்வதுரையிடமும், ராகினியிடமும் கேட்டு வந்துள்ளார். இதனால் மரிமுத்துவை தீர்த்து கட்ட வில்வராஜிடம் ராகினி கூறியுள்ளார். அதன்படி, கடந்த மாதம் 27ந்தேதி மாரிமுத்துவுக்கு அவரது பணத்தை ராகினி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறி மாரிமுத்துவை சங்கரன்கோவிலுக்கு காரில் கடத்தி வந்துள்ளனர்.

அங்கு அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்குள்ள கண்மாயில் கல்லை கட்டி உடலை போட்டுவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து, மாரிமுத்துவின் உடலை அழுகிய நிலையில் மீட்ட போலீசார் காவலர் வில்வதுரை, நண்பர் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மோசடி பெண் ராகினி மற்றும் இளவரசியை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி