ஆப்நகரம்

திருவாரூர்: ‘கைதி’ படம் பார்த்த கொலைக் கைதி!

பணத்திற்காக காங்கிரஸ் பிரமுகரின் மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருத்துறைபூண்டி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Nov 2019, 2:48 pm
திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி அருகே மருதாவனம் காங்கிரஸ் பிரமுகர் மனைவி கொலை வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டவரைபோலீஸார் கைது செய்தனர்.
Samayam Tamil திருவாரூர்: ‘கைதி’ படம் பார்த்த கொலைக் கைதி!


காங்கிரஸ் பிரமுகர் ராமச்சந்திரன் நேற்றுமுன்தினம் திருத்துறைபூண்டி சென்றுள்ளார். மாலை வீடு திரும்பியபோது அவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65) கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பீரோவில் இருந்த பணமும் களவு போயிருந்தது. இந்நிலையில் ராமச்சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார்.

மாணவரை சுட்ட வழக்கு: விஜய் நீதிமன்றத்தில் சரண்!

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் வாசலில் தேய்ந்த ஒரு ஜோடி செருப்பு கிடந்ததைப் பார்த்தனர். மேலும் பீரோவில் சலவைக்கு போய் வந்த ஆடைகள் அடுக்கிவைக்கப்பட்டதை பார்த்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் சலவைத் தொழிலாளி முருகானந்தம் அடிக்கடி வீட்டிற்கு வருவது தெரியவந்தது.

முருகானந்ததின் செல்போன் எண்ணைக் கொண்டு அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிய முயன்றனர். அவர் திருத்துறைபூண்டி எஸ்என்எஸ் திரையரங்கில் ‘கைதி’ திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவருக்காக படம் முடியும்வரை வாசலில் காவல்துறையினர் காத்து நின்றனர். படம் முடிவடைந்ததும் வெளியே வந்த முருகானந்தம் காலில் செருப்பில்லாமலும், கை நிறைய பணத்துடனும் வந்ததை காவல்துறையினர் கவனித்தனர்.

விளையாட்டாக நெற்றியில் வைத்து சுட்டேன், வெடிக்குமென தெரியாது - இளைஞர் விஜய்

இதனால் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பணத்திற்காக முருகானந்தம் ராஜேஸ்வரியின் கழுத்தை வீட்டிலிருந்த கத்தியை கொண்டு அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. தன்மேல் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் கொலை செய்த கையோடு முருகானந்தம் திரையரங்கிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் திருத்துறை பூண்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி