ஆப்நகரம்

புதுக்கோட்டை சிறுமி வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

புதுக்கோட்டை அருகே சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கத்தில் கைதான நபருக்கு நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை அளித்துள்ளது.

Samayam Tamil 29 Dec 2020, 7:01 pm
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான்-செல்வி தம்பதியரின் 7 வயது மகள் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். இதையயடுத்து, அவரை அக்கம்பக்கத்தில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமி கிடைக்காததால் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள கருவேல மரங்கள் அதிகம் உள்ள இடத்தில சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
Samayam Tamil pudukottai rape case


இதையடுத்து, சிறுமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், சிறுமி கொலை செய்யப்படுவகற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் வீட்டருகில் உள்ள பூ வியாபாரி ராஜாவை பிடித்து விசாரித்தனர்.

'ஹேமந்த் படுக்கையை விட்டு எழவே மாட்டார், சுதந்திரத்தை இழந்த சித்ரா'

விசாரணையில், சிறுமியை கடத்தியதும், கொலை செய்ததும் அவர்தான் என உறுதியானது. தொடர்ந்து அவரை பத்து வழக்குகளின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளி ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது. பாலியல் சம்பவம் நடந்து 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வழக்கை விரைவாக விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி