ஆப்நகரம்

அயனாவரம் பாலியல் வழக்கின் குற்றவாளி சிறைக்குள் தூக்கிலிட்டு தற்கொலை..!

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வந்த பழனி என்ற என்ற குற்றவாளி தூக்கிலிட்டு தற்கொலை.

Samayam Tamil 27 May 2020, 4:21 pm
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபணம் ஆகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பழனி என்பவர் இன்று சிறைக்குள்ளேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Samayam Tamil அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை


சிறையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்த அவரை சிறை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து, சடலத்தை இறக்கி சம்பவத்தை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட கைதி தூக்கிற்கு லுங்கியை பயன்படுத்தியுள்ளதகாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் முன்னதாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணையின் போது சிறையில் இருந்த பாபு என்பவர் உயிரிழந்துவிட்டார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம் 16 பேரில் ஒருவரை குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தது.

கேரளா பெண் கொலை: முதன்முறை பாம்பிற்கு பிரேத பரிசோதனை..!

எஞ்சிய 15 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி