ஆப்நகரம்

மன அழுத்தம் காரணமாக மனைவி, மகனை விட்டுட்டு காவலர் தற்கொலை..! புதுச்சேரியில் சோகம்

புதுச்சேரியில் காவலர் பயிற்சி பள்ளி மாடியில் இருந்து காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Samayam Tamil 14 Jan 2022, 6:56 pm
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ளது காவலர் பயிற்சி பள்ளி. இங்கு ஆள் சேர்ப்பு பிரிவில் காவலராக பணி புரிந்து வந்தவர் மகேஷ் (36). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார்.
Samayam Tamil புதுச்சேரியில் காவலர் தற்கொலை


புதுச்சேரியில் விரைவில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு முலம் நிரப்பும் பணி நடைபெற உள்ளதால் இதர்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிக்கு வந்த மகேஷ் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

இதனை கண்ட காவலர்கள் அவரது உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நாகையில் விசிக கிளை செயலாளர் எரிந்த நிலையில் மரணம்: உறவினர்கள் சந்தேகம்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தன்வந்திரி நகர் போலீசார் காவலர் மகேஷ் தற்கொலை செய்ததற்கான காரனம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்கொலை செய்து கொண்ட காவலர் மகேஷ்க்கு மனைவி மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி