ஆப்நகரம்

கஸ்டடி மரணம்: தண்டனை வழங்கியது நீதிமன்றம்..!

வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 27 Apr 2021, 2:21 pm
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மொட்டனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 05.04.2010 தேதி என்று அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கத்தியைக்காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Samayam Tamil கோப்புப்படம்


அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செந்தில்குமாரை வேடசந்தூர் நீதிமன்ற நடுவர் முன்பு நிறுத்தி 15 நாட்கள் நீதிமன்றக் காவல் பெற்றனர்.

அதனை தொடர்ந்து செந்தில்குமாரை வேடசந்தூர் கிளைச் சிறைச்சாலையில் அடைக்க கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியில் செந்தில்குமாருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. தொடர்ந்து, உடன் இருந்த காவலர்கள் அவரை உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நிர்வாண வீடியோ, காருக்குள் கொடுமை, சித்ராவை போல நடக்கக்கூடாது - நடிகை பரபரப்பு

அப்போது, மருத்துவர் தினேஷ்குமார் சிகிச்சையளித்திருக்கிறார். சிகிச்சையில் இருந்த போதே செந்தில்குமார் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், சுரேஷுக்கும், செந்தில்குமாருக்கும் ஏற்கனவே சொத்து பிரச்சினை இருந்ததாகவும், அதனால் செந்தில்குமார் மீது அவர் பொய்யான புகாரை அளித்ததாகவும் செந்தில்குமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனிடையே செந்தில்குமாரின் உடல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பேச்சுவார்த்தைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் செந்தில்குமாரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்றும் மருத்துவர்கள் சான்றளித்தனர்.

ஆனால், செந்தில்குமார் கைது செய்யப்படும் போது அவர் நன்றாக குடித்திருந்ததாகவும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் கைது செய்ததாக சப் இன்ஸ்பெக்டரை தற்காலிக பனி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 10 வருடங்களாக நடந்து வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பளித்த நீதிபதி சார்பு ஆய்வாளர் மற்றும் 2 தலைமை காவலர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி