ஆப்நகரம்

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சிறை..! இந்து முன்னணி கட்சி நாளை ஆர்ப்பாட்டம்

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Samayam Tamil 15 Aug 2022, 4:41 pm
சென்னை, மதுரவாயல் பகுதியில், இந்து முன்னணி சார்பில், இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பெரியார் குறித்து தரக் குறைவாக கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil kanal kannan


இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை இன்று புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து கனல் கண்ணனை தமிழகம் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கொள்ளையர்களாக மாறிய பள்ளி நண்பர்கள்... 72 மணி நேர அதிரடி ஆபரேஷன்... சென்னை வங்கி கொள்ளை

நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அவரை சிறைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி