ஆப்நகரம்

இந்த நடிகையை ஞாபகம் உள்ளதா? திருட்டு வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ளார்...

கடலூர் அருகே சொந்த வீட்டில் நகை, பணத்தை திருடிய சின்னத்திரை நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 15 Sep 2020, 6:50 pm
சின்னத்திரையில் தெய்வமகள், அரண்மனைக்கிளி ஆகிய நாடகங்களில் நடித்து பிரபலமானவர் சுசித்ரா. இவர் சில வருடங்களுக்கு முன்பு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற மணிகண்டன் என்ற கார் ஓட்டுனரை திருமணம் செய்துகொண்டார்.
Samayam Tamil suchithra


மணிகண்டன் கடலூர் மாவட்டம் பண்ட்ருட்டியைச் சேர்ந்தவராவார். திருமணம் நடந்த பிறகு அவர் சுசித்ராவுடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடக்காதா சூழலில் சுசித்ரா வருமானத்தை இழந்துள்ளார். அதேபோல மணிகண்டனும் கார் எங்கும் செல்லமுடியாத நிலையில் வேலையிழந்து வீட்டில் இருந்துள்ளார்.

இதன் விளைவாக இருவருக்கும் பண கஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்துகொள்ள திட்டமிட்ட சுசித்ரா, தனது மாமனாரின் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை திருடி வர மணிகண்டனிடமே கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட மணிகண்டனும் கடலூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று, தந்தை தேசிங்கு வீட்டில் இல்லாத நேரத்தில் 18 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை: உயிரை பறித்த ஆன்லைன் சூது, கணவனை இழந்த கர்ப்பிணி மனைவி கதறல்

இந்நிலையில், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தேசிங்கு, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததும் நகைகள் திருடப்பட்டு இருந்ததும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதோடு மகன் மணிகண்டன் மீது சந்தேகம் அடைந்த அவர் தொடர்ந்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரித்த போலீசாருக்கு மணிகண்டன்தான் திருட்டில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்த அவர்கள், மணியிடம் இருந்து நகையையும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் கைப்பற்றினார்கள். மேலும், தலைமறைவாகியுள்ள சுசித்ராவையும் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி