ஆப்நகரம்

பெற்றோரே விற்ற இளம்பெண்ணை பல மாவட்டங்களில் பாலியல் பலாத்காரம் அவலம்!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 15 லட்சம் பணத்துக்காக பெற்றோரே காமுகர்களிடம் விற்ற சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாவதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

Samayam Tamil 18 May 2019, 3:18 pm
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 15 லட்சம் பணத்துக்காக பெற்றோரே காமுகர்களிடம் விற்ற சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாவதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
Samayam Tamil sex rape child abuse


மத்திய பிரதேசத்தின் பகுதியில் வசிக்கும் ஓர் ஏழை தலித் குடும்பத்தில் கணவருக்கு கண் தெரியாது. மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுடைய 15 வயது பெண்ணை 15 லட்சம் பணத்துக்காக விற்க இக்குடும்பத்தின் உறவினர்கள் பெற்றோரை சம்மதிக்க வைத்தனர்.

சிறுமி கடத்தப்பட்டார். ஒரு காமுகன் சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான். பின்னர் அவன் பிடியில் இருந்து சாதுர்யமாகத் தப்பினார் சிறுமி. உடனே காவல் நிலையத்தை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டார். சிறுமியை பத்திரமாக மீட்ட காவலர்கள், சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

விஷயம் காவல் உயர் அதிகாரிகளிடம் சென்றது. சிறுமிகளைக் கடத்தி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளும் கூட்டத்தை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகளில் ஒருவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டத்தில் கடத்தப்படும் சிறுமிகள் மகாராஷ்டா, உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக தெரிவித்தார்.

இச்செய்தி இணையத்தில் பரவி தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்த செய்தி