மதுரை அருகே இரதரப்பு மோதலில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், வீடு புகுந்து வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவரது மனைவி பிரேமா. நிருபன் அப்பகுதியில் சுண்ணாம்பு பவுடர் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து இருளன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை நிருபன் சக்கரவர்த்தியின் வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. தடுக்க வந்த அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் படுகாயமடைந்த நிருபன் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிருபன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது மனைவி பிரேமா உயிருக்கு ஆபாத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை நடந்த இடத்திற்கு மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் படி காவல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இரு தரப்பினர் மோதலால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவரது மனைவி பிரேமா. நிருபன் அப்பகுதியில் சுண்ணாம்பு பவுடர் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து இருளன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை நிருபன் சக்கரவர்த்தியின் வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. தடுக்க வந்த அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் படுகாயமடைந்த நிருபன் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிருபன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது மனைவி பிரேமா உயிருக்கு ஆபாத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை நடந்த இடத்திற்கு மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் படி காவல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இரு தரப்பினர் மோதலால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.