ஆப்நகரம்

மாமியாரை கொன்றுவிட்டு மருமகள் தற்கொலை... புத்தியை மறைத்த கோபம்... சேலத்தில் பரபரப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மாமியாரை அடித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட மருமகள்

Samayam Tamil 4 Jul 2022, 7:35 pm
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி கிராமம் தானமூர்த்தியூரில் வசித்து வரும் எல்லப்பன் மனைவி தைலம்மாள் (75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தைலம்மாளின் கடைசி மகனான ஓட்டுநர் மெய்வேலின் மனைவி செல்விக்கும் மாமியார் தைலமாலுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடங்கி தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது வரை கடந்த பல ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே வாய் தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.
Samayam Tamil மருமகள் தற்கொலை


இந்த நிலையில் இன்று தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த மருமகள் செல்வி மாமியார் தைலம்மாலை மண்வெட்டியால் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிருக்கு போராடியுள்ளனர். தாயாரின் சத்தம் கேட்டு கடைசி மகன் மெய்வேல் வீட்டுக்குள் சென்று பார்த்த போது தைலம்மாள் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.

உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து தனது தாயை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில் மெய்வேலின் மனைவி செல்வி போலீசுக்கு பயந்து அவரது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சின்ன பையனுடன் கள்ளக்காதல்... கணவனை கொன்று நாடகமாடிய மனைவி... விசாரணையில் போலீஸ் ஷாக்..!

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமியாரை அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருமகளால் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இறந்து போன மாமியார் மருமகள் இருவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி