ஆப்நகரம்

கடனாளி தாய் காலில் விழுந்து கெஞ்சியும் காதலனுடன் சென்ற மகள்..! சாத்தூரில் சோகம்

குமரி அருகே கடன் பட்டு படிக்க வைத்த தாயை உதறிவிட்டு காதலனுடன் சென்ற பெண்

Samayam Tamil 14 Feb 2021, 3:59 pm
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (21). இவர் நாகர்கோவிலில் நர்சிங் படிந்து வந்துள்ளார். அப்போது, இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த பீமாராவ் என்பவரும் பழகி வந்த நிலையில் காதலை வளர்த்துக்கொண்டனர். பீமாராவ் (23) ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு பீமாராவ் பவித்ராவை அழைத்து சென்று ஓசூரில் உள்ள கோவிலில் வைத்து தாலி காட்டியுள்ளார்.
Samayam Tamil பவித்ரா பீமாராவ்


அதனையடுத்து இருவரும் சாத்தன்குளம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் மேஜர் என்பதால் அங்கிருந்த போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்து சமரசம் பேசியுள்ளனர். காவல் நிலையத்துக்கு வந்த பவித்ராவின் தாய் கண்ணீர்விட்டு கதறிய நிலையில், வீட்டுக்கு வந்துவிடுமாறு அவரது காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.

அப்போது, பவித்ரா தாயுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த பெண்மணி போலீசாரிடம் கூறி அழுத சம்பவம் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. அதாவது, பவித்ராவின் தந்தை முத்து முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

பிறந்து எட்டு நாளேயான குழந்தையை தூக்கிச் சென்று கொன்ற குரங்கு..! தஞ்சையில் சோகம்

இதனால் கட்டிட வேலைக்கு சென்றும், ஐந்து லட்சம் வரை கடன் வாங்கியும் பவித்ராவை அவரது தாய் படிக்க வைத்துள்ளார். பவித்ராவின் படிப்பு முடிய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், கடைசி நேரத்தில் படிப்பை உதறி தள்ளிவிட்டு செல்லாதே என்று கூறி காவல் நிலையத்தில் கண்கலங்கினார்.

மேலும், மகள் விரும்பியவருடனே ஊரறிய திருமணம் செய்துவைப்பேன் என்று உறுதி அளித்த அவர், அதுவரை பீமாராவுடன் செல்போனில் பேசிக்கொள் என்றும் கூறியுள்ளார். ஆனால், தாயின் கோரிக்கையை ஏற்க மறுத்த பவித்ரா தன்னை கணவனுடன் அனுப்பி வையுங்கள் என்று போலீசாரிடம் கூறியதையடுத்து, இரு தரப்பினரிடம் எழுதி வாங்கிக்கொண்டு பவித்ராவை பீமாராவுடன் அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் மகளின் காலில் விழுந்து கெஞ்சிய தாயின் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி