ஆப்நகரம்

கோவை மருத்துவமனை கழிவறையில் கிடந்த பெண் குழந்தை..! இறந்தே போச்சு

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் கிடந்த பெண் குழந்தையை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 1 Dec 2020, 8:59 pm
கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் கோவை மட்டுமில்லாமல் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமணையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நேற்று காலை சென்றனர்.
Samayam Tamil கோவை அரசு மருத்துவமனை


அப்போது ஒரு கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அசைவற்று கிடந்த அந்த குழந்தையை குறித்து உடனே மருத்துவர்களுக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்ற மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் விசாரித்ததில், இறந்த குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கலாம் என்று தெரிய வந்தது.

இறந்த நோயாளி உயிருடன் இருப்பதாக கூறி கட்டணம் வாங்கிய பிரைவேட் ஆஸ்பத்திரி..! புதுக்கோட்டை அதிர்ச்சி

இதையடுத்து, அந்த வார்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் கடந்த இரண்டு நாட்களில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அடுத்த செய்தி