ஆப்நகரம்

மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு டெல்லி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடித்த போலீசார் தீவிர தேடு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 20 May 2019, 1:34 pm
டெல்லியில் மெட்ரோ நிலையம் அருகே இரண்டு கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சையடைச் செய்துள்ளது.
Samayam Tamil டெல்லி மெட்ரோ ரயில்நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
டெல்லி மெட்ரோ ரயில்நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி


தென்மேற்கு டெல்லியில் உள்ள துவார்கோர் மோட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில், பரபரப்பான சாலையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் நடைபெற்றது.

இதில் திடீரென அவர்கள் துப்பாக்கியால் தாக்கிக்கொள்ள, பர்வீன் கெலோட் மற்றும் விகாஸ் தலால் என்ற இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் மீதும் டெல்லி மற்றும் ஹரியானாவில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் கூறிய போலீசார், நேற்று மாலை 4 மணி அளவில், பர்வீன் கெலோட் சென்று கொண்டிருந்த காரை, இன்னொரு கார் மூலம் சிலர் வழிமறித்துள்ளனர்.

அப்போது திடீரென்று கெலோட் இருந்த கார் மீது சரமாரியாக இன்னொரு கும்பல் சுட ஆரம்பித்துள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும் போலீசார், பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர், தப்பியோடிவிட்டதாகவும், தப்பித்துச் சென்ற நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி