ஆப்நகரம்

பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கும் சோகம்; நீங்காத சாதியம்- ஒதுக்கப்படும் தலித்கள்!

சுடுகாட்டு பாதையில் செல்ல தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பிணத்தை கயிறு கட்டி கீழே இறக்கி தகனம் செய்ய வேண்டிய பரிதாப சூழல் ஏற்பட்டு வருகிறது.

Samayam Tamil 22 Aug 2019, 10:04 am
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் தலித் காலணியைச் சேர்ந்தவர் குப்பன்(55). இவர் கடந்த வெள்ளி அன்று சாலை விபத்தில் பலியானார். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கடந்த சனி அன்று அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Samayam Tamil Dalit Issue


குப்பனுக்கு கஸ்தூரி(49) என்ற மனைவியும், கவிதா(31), தினேஷ்(28), கண்ணதாசன்(26) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். இந்த கிராமத்தில் போதிய சுடுகாட்டு வசதிகள் இல்லாததால், அருகிலுள்ள பாலாற்றின் கரையில் பிணங்களை எரியூட்டி வந்துள்ளனர்.

Also Read: கைவிட்ட கணவன்..என்னையும், என் மகனையும் கொன்னுடுங்க- கதறிய பெண்!

இந்த சூழலில் அரசலாந்தபுரம் - நாராயணபுரம் இடையே பாலாற்றின் மீது பாலம் கட்டப்பட்டது. அப்போது பாலத்திற்கு செல்லும் வழியை, சில மேல்சாதியினர் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டனர். இதனால் அந்த வழியே தலித்கள் தங்கள் பிணங்களைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன்(49) என்ற தலித் கூறுகையில், எங்களுக்கு பிணங்களைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் மேலிருந்து கயிறு கட்டி, பிணங்களை கீழே இறக்கி தகனம் செய்து விடுவோம்.

Also Read: பைக் திருட முயன்றவரை சண்டையிட்டு பிடித்து, போலீசில் ஒப்படைத்த முதியவர்!

இதேபோல் கடந்த 4 ஆண்டுகளாக கயிறு கட்டி தான் 4 பேரின் உடல்களை எரியூட்டி இருக்கிறோம். இப்போது குப்பனுக்கும் இதேநிலை தான் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் மேல்சாதியினரிடம் இருந்து நேரடியாக எந்தவித மிரட்டலும் வரவில்லை என்கின்றனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பை நல்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். குப்பனின் உறவினர் விஜய்(21) கூறுகையில், கடந்த சனிக்கிழமை அன்று எங்கள் மாமாவின் உடலை சுடுகாட்டு பாதையில் கொண்டு சென்றோம்.

Also Read: வெறும் தரையில் ரத்தம் தெறிக்க நடந்த பிரசவம்- அரசு மருத்துவமனையின் உச்சக்கட்ட அலட்சியம்!

ஆனால் மேல்சாதியினரின் நிலத்தைக் கடக்க முயற்சிக்கையில், அங்கு காவல் காத்து வரும் வாட்ச்மேன் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார். இதனால் சாதிக் கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, நாங்கள் வழக்கம் போல் பாலத்தில் இருந்து கயிறு கட்டி உடலை கீழே இறக்கினோம் என்று கூறினார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை தொடர்பு கொண்டு கேட்கையில், இதுகுறித்து வருவாய்த் துறை விசாரித்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி