ஆப்நகரம்

வேலூர்: லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது!

ஐம்பதாயிரம் லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை பொறி வைத்துப் பிடித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.

Samayam Tamil 29 Feb 2020, 6:01 pm
வேலூர், இரும்புலி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் நில பத்திரத்தை விடுவிக்க 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் தனிதுணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன்.
Samayam Tamil லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது


இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் ரஞ்சித் குமார் புகார் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய பணத்தை ரஞ்சித் குமாரிடம் கொடுத்து அதனைத் தினகரனிடம் கொடுக்க கூறியுள்ளனர். அதன்படியே ரஞ்சித் குமாரும் அந்தப் பணத்துடன் நேற்று இரவு செல்ல, தனி துணை ஆட்சியர் தினகரன் தனது காரில் வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தினகரனின் காரை பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்து, அவரையும் ஓட்டுநர் ரமேஷையும் கைது செய்தனர். அதோடு, ரஞ்சித் குமார் கொடுத்த ரூ.50 ஆயிரத்துடன் அவரிடம் இருந்த மொத்தம் ரூ.2.44 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இது உங்கள் சொத்து! பேருந்து கண்ணாடியை தெறிக்க விட்ட மாணவர்... வீடியோ..!

மேலும் ஓட்டுநர் ரமேஷ் குமாரிடமும், தினகரனிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று (பிப்ரவரி 29) தினகரன் வீட்டிலும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரன் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணியிட மாற்றம் செய்த பின்னரும் மாறுதல் ஆகாமல் இருந்து லஞ்சம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி