ஆப்நகரம்

திருச்சி காவலரின் வீரச்செயல்: டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு

திருச்சி அருகே கஞ்சா கடத்தியவர்களை பிடிக்க முயற்சித்து காயமடைந்த காவலருக்கு பாராட்டு

Samayam Tamil 27 Jul 2021, 7:34 pm
திருச்சி மாநகர தலைமை காவலரின் வீரச்செயலுக்கு பாராட்டி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு பரிசு வழங்கியுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


திருச்சி மாநகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் ரோந்து பணியில் இருந்தபோது TN52 T6484 எண் கொண்ட நிற்காமல் சென்ற காரின் முன்பக்கம் தொற்றிக்கொண்டு பிடிக்க முயன்றபோது தூக்கி வீசப்பட்டார். அதன் பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீசார் காரை சாமர்த்தியமாக மடக்கி பிடித்தனர்.

மேலும், அந்த காரை ஓட்டி வந்த நபரிடமிருந்து சுமார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இந்நிலையில், உயிரை பணயம் வைத்து காரை விரட்டி சென்ற சரவணன் காயங்களுடன் தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது வீரச்செயலை பாராட்டி தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ரூ. 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கினார்.

''பெண்கள் வெறியன்'' இளம்பெண்ணின் வீடியோவால் கடைசி நேரத்தில் நின்ற திருமணம்!

மேலும், மருத்துவமனையில் உள்ள காவலர் சரவணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியும், உரிய மருத்துவ சிகிச்சை வழங்க திருச்சி கவால்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி