ஆப்நகரம்

ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவன் தற்கொலை; தருமபுரியில் சோகம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தாய் பணம் தர மறுத்ததால் கல்லூரி மாணவன் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Apr 2022, 11:19 am
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் செட்டியப்பன். இவரது மகன் வினித். இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் இயங்காததால் இவருக்கு ஆன்லைனில் பணம் கட்டி சூதாடும் பழக்கம் இருந்துள்ளது.
Samayam Tamil ஆன்லைன் ரம்மியால் கல்லூரி மாணவன் தற்கொலை


இந்நிலையில் தனது தாயிடம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். சூதாட்டத்தில் பணத்தையும் இழந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல ஆன்லைனில் சூதாட்டம் ஆடுவதற்கு தாயிடம் பணம் கேட்டு அவரது தாய் பணம் தர மறுத்ததால் வீட்டிலிருந்து நேற்று மதியம் வினித் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், ஏரியூர் அருகே ஆசாரி திட்டு என்ற வனப்பகுதியில் வினித் மரத்தில் சேலையில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை அப்பகுதியே சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஏரியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் வினித்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கல்லூரி மாணவன் தற்கொலை மரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் எனவும், இதனால் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குடும்பங்கள் பாதிக்கபடுகிறது எனவும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி