ஆப்நகரம்

Lanka Blast Suspects: தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு இலங்கை தாக்குதலை நடத்தியதா?

தமிழகத்தில் செயல்பட்டுவரும் தாவீத் ஜமாத் அமைப்பு இலங்கை தாக்குதலுக்குக் காரணமாக இருக்குமோ என உளவுத்துறை சந்தேகிக்கிறது. ஆனால் சிறிய பயங்கரவாத அமைப்பான தாவீத் ஜமாத் இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்பு நடத்துவது இயலாத காரியம் எனவும் கருதப்படுகிறது.

Samayam Tamil 22 Apr 2019, 12:54 pm
இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.
Samayam Tamil gun


இந்த சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரிய வந்துள்ளது.

இலங்கை இஸ்லாமியர்களுக்கும் பவுத்தர்களுக்குமான போர் - ஓர் பார்வை

இதற்கிடையே, பலியான வெளிநாட்டினரில் 4 பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் உடல்கள், கொழும்பில் உள்ள தேசிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்; யார் இவர்கள்?

பலியான இந்தியர்களின் பெயர்கள் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரஜினா (வயது 58) ஆகும். இவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 இந்தியர்கள் பலியான செய்தியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் உறுதி செய்துள்ளார்.

குண்டு வெடிப்பில் பலியான ரஜினா கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர். அவரை பற்றிய விவரம் பின்வருமாறு:-

மங்களூரு பைக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் குக்காடி. இவருடைய மனைவி ரஜினா (58). இவர்கள் மும்பையில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்துல் காதரும், ரஜினாவும் உறவினரை பார்ப்பதற்காக இலங்கைக்கு சென்றனர். ரஜினாவை இலங்கையில் விட்டுவிட்டு அப்துல் காதர், துபாய்க்கு சென்றுவிட்டாா். இதனால் ரஜினா, கொழும்பு நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது தான், அவர் தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் சிக்கி ரஜினா உயிரிழந்தார்.

தற்போது தமிழகத்தில் செயல்பட்டுவரும் தாவீத் ஜமாத் அமைப்பு இத்தாக்குதலுக்குக் காரணமாக இருக்குமோ என உளவுத்துறை சந்தேகிக்கிறது.

ஆனால் சிறிய பயங்கரவாத அமைப்பான தாவீத் ஜமாத் இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்பு நடத்துவது இயலாத காரியம் எனவும் கருதப்படுகிறது. இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பெரிய பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில் இந்த குழப்பம் நீடித்து வருகிறது.


2016ம் ஆண்டில் டாகாவில் நடந்த ஹோலே ஆர்டிசான் பேக்கரி தற்கொலை தாக்குதலுல்போலவே இந்த தாக்குதல் அமைந்துள்ளது. அந்த தாக்குதலில் உள்ளூர் இளைஞர்கள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பயிற்சி பெற்று இருந்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். அதற்குப் பின்னர் இதுபோன்ற பெரிய தாக்குதல் இலங்கையில் நடைபெற்றதில்லை.

தமிழக மீனவர்கள் நால்வர் தேவாலயங்கள் குண்டு வெடிப்புக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அடுத்த செய்தி