ஆப்நகரம்

சென்னையில் தாயின் முன்பு மாற்று திறனாளி பெண் கூட்டு பலாத்காரம்..!

சென்னை அமைந்தகரை அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டு பலாத்தகாரம் செய்ததாக இருவர் கைது.

Samayam Tamil 27 Aug 2020, 7:21 pm
சென்னை டிபி சத்திரம் அருகே உள்ள குயிருப்பில் பெண் ஒருவர் தனது மனநலம் குன்றிய மகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண்ணின் தாய் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். ஆனால், போலீசார் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டி வந்துள்ளனர்.
Samayam Tamil file pic


இந்நிலையில், சென்னையில் உள்ள மாற்று திறனாளி சங்கத்தினர் உதவியுடன் இந்த விவகாரம் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்றுள்ளளது. அதையடுத்து, பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டு என சென்னை கமிஷினருக்கு ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, டிபி சத்திரத்தை சேர்ந்த ராஜ்குமார், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

சம்பவம் நடந்த அன்று இரவு பாதிக்கப்பட்டபெண்ணும், அவருடைய தாயும் தங்களது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் கதைவை உடைத்து உள்ளே வந்த ராஜ்குமார், ஆனந்த் மற்றும் மற்றொரு வாலிபர் சேர்ந்து அந்த பெண்ணையும், தாயையும் அடித்து தாக்கியுள்ளனர்.

மனைவி ஒரு அறை, மகள் ஒரு அறையில் காதல் ஆட்டம்! கணவன் தூக்கிலிட்டு தற்கொலை

சத்தம் போடகூடாதென கூறி கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள், ஒருவர் பின் ஒருவராக அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். தற்போது அந்த வழக்கில் இருவர் கைதாகியுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மூன்றாவது வாலிபரை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி