ஆப்நகரம்

ரேஷன் கடையில் புழு பூத்த அரிசி விநியோகம்... தெருவில் வீசி சென்ற பொதுமக்கள்

கடலூர் அருகே நியாய விலைக் கடையில் கெட்டுப்போன அரிசியை விநியோகித்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

Samayam Tamil 16 Apr 2021, 7:54 pm
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம் சத்தியவாடி கிராம நியாயவிலைக் கடையில் அசுத்தமான மற்றும் புழு பூத்த அரிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது.
Samayam Tamil புழு பூத்த அரிசி


இந்த நிலை நெடுநாட்களாக இருக்கிறது என்றும், நியாயவிலை அதிகாரியிடம் கேட்டால் அலட்சியமாகப் பதில் அளிக்கிறார் என பொதுமக்கள் அடுக்கடுக்காக புகார்களை கூறுகின்றனர்.

இந்த புழு பூத்த அரிசி மற்றும் நாற்றம் வீசும் அரிசியை சாப்பிடுவதன் மூலம் சிலர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக மோசமான உடல்நிலை பாதிக்கப்பட்டுஇ ருக்கிறது எனவும், இந்த நியாயவிலை கடையில் மக்களுக்காக வரும் பொருட்கள் சிலருக்கு தனிப்பட்டமுறையில் விற்கப்படுகிறது என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.

தொழிலதிபர், அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு... ராதா கணவரின் கதறல்..!

மேலும், அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பல பொருட்கள் எது நன்றாக இருக்கிறதோ அதை பணம் வாங்கிக்கொண்டு விற்றுவிடுகிறார்கள் என பொதுமக்கள் புலம்பி தள்ளுகின்றனர். எனவே இதை உடனே மாவட்ட நிர்வாகம் நல்ல பொருட்கள் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி