ஆப்நகரம்

விவாகரத்து பெற்ற பெண் மகனுடன் தற்கொலை? அம்பத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அம்பத்தூர் அருகே கணவனை பிரிந்து வசித்து வந்த பெண் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Apr 2022, 5:57 pm
சென்னை அம்பத்தூர் அடுத்த பள்ளி சாலையை சேர்ந்தவர் பரத்வாஜ். இவரது மனைவி லதா (38). இந்த தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 14 வயதில் தவஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து லதாவும், மகன் தவஜும் தனியாக வசித்து வந்தனர்.
Samayam Tamil மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை
மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை


கணவன் மனைவி இருவரும் விவாகரத்தும் பெற்று விட்டனர். இந்த சூழலில் இன்று காலை லதா அவரது வீட்டில் மயங்கிபடி கிடந்துள்ளார். மகன் தவஜ் பாதி மயக்கத்தில் இருந்துள்ளார். இதை கண்ட பக்கத்துக்கு வீட்டு காரர் உறவினர்கள் உதவியுடன் இருவரையும் அருகிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு லதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மகன் தவஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரனையில், இருவரும் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார் தாய்,மகன் இருவரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

'அந்த பெண்தான் எங்களை ரேப் செய்தார்'; விருதுநகர் வழக்கில் முதல்வருக்கு புகார் அனுப்பிய சிறுவன்

தொடர்ந்து விசாரித்ததில், மகனுடன் தனிமையில் வசித்து வந்த லதா கடுமையான பண நெருக்கடியில் இருந்ததாகவும், அதனால் தானும் விஷம் குடித்துவிட்டு மகனுக்கும் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி