ஆப்நகரம்

திமுக தலைமை செயற்குழு உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு..! சென்னையில் பரபரப்பு

சென்னை அருகே திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Oct 2020, 5:39 pm
திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருபவர் கே.கே.நகர் தனசேகரன். இவர் இன்று கே.கே.நகர் அலுவலகத்தில் இருந்த போது திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் அமுதா என்ற பெண்ணை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த தனசேகரனையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளது.
Samayam Tamil kk nagar dhanasekaran


உடனே இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துததன் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிர்வாணமாக வெளியே வந்த முதியவர், நாமக்கல் சிறுமிகளுக்கு நடந்த 6 மாத கொடுமை..!

தற்போது, தனசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி