ஆப்நகரம்

நில மோசடி: மா.சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜர்!

நிலமோசடி குற்றச்சாட்டில் மா.சுப்பிரமணியன் தனது மனைவியுடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

Samayam Tamil 28 Nov 2019, 1:10 pm
அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த நில மோசடி வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
Samayam Tamil மா.சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜர்


மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பது சர்வாதிகாரம்: ஸ்டாலின் காட்டம்

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை சைதாபேட்டை தொகுதியின் தற்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

டிக் டாக் வீடியோ: மனைவியை கொன்ற கணவன்!

வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் மா.சுப்ரமணியன் மீது
போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடத்த 2ஆம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தொடர்ந்து, மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர்.

கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு: காங்கிரஸ் வெளிநடப்பு!

தொடர்ந்து, குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கு விசாரணை டிசம்பர் 12 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி