ஆப்நகரம்

விழுப்புரம் பாமக நிர்வாகி வெட்டிக் கொலை..! மர்ம நபர்கள் தப்பியோட்டம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 25 Oct 2020, 3:56 pm
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர் பாமக நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், இன்று மாலை கையில் அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் பாரதியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
Samayam Tamil file pic


சம்பவ இடத்தில இருந்தவர்கள் பாரதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பாரதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரேதத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாமக நிர்வாகி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு மனைவிகளுடன் உடலுறவு, லைவ் ஷோ காட்டி சம்பாதித்த கணவர் கைது..!

இதேபோல கடந்த வருடம் பிப்ரவரியில்,தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி