ஆப்நகரம்

வள்ளியூர்: திமுக நிர்வாகி வெட்டி படுகொலை!

வள்ளியூர் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 13 Sep 2020, 10:40 am
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே திமுக இளைஞரணி நிர்வாகியை இரவில் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.
Samayam Tamil திமுக


நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர் முத்துராமன் . இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர்களுடன் காரில் வெளியில் சென்றுவிட்டு வள்ளியூரில் இருந்து தெற்கு வள்ளியூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது தெற்கு வள்ளியூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது சாலையில் இரண்டு பேரல்கள் வைத்து தடுப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு முத்துராமன் பேரலை அகற்றிய போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.

விருதுநகரில் முன்பகை காரணமாக முன்னாள் மாவட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை..!

உடனாடியாக காரில் இருந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் . இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார் .

இதுகுறித்து அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் . மேலும் பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரைப்பிடித்து விசாரித்து வரும் நிலையில் மேலும் 4 பேரைத் தேடிவருகின்றனர் .

ஸ்கூட்டர் ஓட்ட பழகிய மனைவி, கற்றுக்கொடுத்த கணவன், லாரி மோதி இருவரும் பலி

மேலும் இந்த கொலை அரசியல் போட்டி காரணமாக நடந்ததா, அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

அடுத்த செய்தி