ஆப்நகரம்

மருத்துவமனை அலட்சியம்: ஸ்ட்ரெச்சரில் சிறுமியின் உடல், போர்வைக்குள் நாய்

உத்தரப் பிரதேசம் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் உடலை நாய் ஒன்று சாப்பிட முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 2:29 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயடைந்த நிலையில் அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது பெற்றோர் விரும்பாததால் மருத்துவமனையின் வழிமுறைகள் முடிந்த பிறகு உடலை குடும்பத்தினருக்கு ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Samayam Tamil மருத்துவமனையில் நாய்


இதற்கிடையில் சிறுமியின் உடலை ஸ்ட்ரெச்சர் மூலம் பிணவறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முடிப்பதற்காக சிறுமியின் தந்தை சரண் சிங் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கையில், பிணவறைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மகளின் உடலை தெரு நாய் ஒன்று போர்வைக்குள் முகத்தை விட்டு சாப்பிட்டு கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.

மேலும், அந்த நிகழ்வினை வீடியோ எடுத்து மருத்துவமனையின் அலட்சியத்தை குறித்து புகார் தெரிவித்தார். அந்த புகாரில், மருத்துவமனை ஊழியர்கள் தனது மகளின் உடலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கவனிக்காமல் விட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


13 வயசு உறவுக்கார சிறுமி; 6 மாசமா நரக வேதனை - காட்டிக் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்!

இதற்கு பதிலளித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், '' சிறுமியின் உடல் ஒரு நிமிடம் கவனிக்கப்படாமல் இருந்திருக்குமே தவிர ஒரு மணி நேரம் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. தெரு நாய்கள் மருத்துவமனைக்குள் வருவதை குறித்து நகராட்சிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளோம். சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த துப்புரவாளர் மற்றும் வார்டு மேனை விசாரித்தோம்.

அவர்கள் கண்காணிக்க அப்போது நிறைய உடல்கள் இருந்தன. இருப்பினும், நாங்கள் அவர்களை இடைநீக்கம் செய்துள்ளோம். மேலும் மருந்தாளருடன் அவசர வேலையில் இருந்த மருத்துவரிடம் விளக்கம் கோரியுள்ளோம்.இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம்'' என தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுஷில் வர்மா தெரிவித்தார். சிறுமியின் உடலில் லேசான கீறல்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி