ஆப்நகரம்

நெல்லை: மலை அடிவாரத்தில் சிறுமியுடன் குடித்தனம், அதிர்ச்சியில் 2 மனைவிகள்!

நெல்லை: இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்

Samayam Tamil 7 Mar 2021, 4:47 pm
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்த ஸ்டீபன் அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவியுடன் பேசி வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு திருமண ஆசையை காட்டி காதலில் வீழ்த்தியுள்ளார் ஸ்டீபன்.
Samayam Tamil கைதான ஸ்டீபன்


இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமி மலை வீடு திரும்பவில்லை. பதட்டமான பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துவிட்டு அக்கம்பக்கத்தில் தேட தொடங்கினர். ஆனால், சிறுமி எங்கும் அகப்படாததால் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் காணாமல் போன மாணவிக்கும், ஸ்டீபனுக்கும் இடையே இருந்த பழக்கம் தெரிய வந்தது. மேலும், முன்பு ஒருநாள் ஸ்டீனிடம் பழகுவது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தபோது, மகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில்தான், சம்பவத்தன்று மாணவியும், ஸ்டீபனும் வீட்டை விட்டு ஓடிவிட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

'கம்பேர் பண்ணுங்க' லலிதா ஜூவல்லரி ஐடி ரெய்டு! 1000 கோடிக்கு மேல் வருமானம் மறைப்பு

தொடர்ந்து இருவரையும் தேடி வந்ததில், நாகர்கோவில் மலை அடிவாரத்தில் ஸ்டீபன் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும், சிறுமியுடன் அந்த பகுதியில் ஸ்டீபன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியாய் வந்தது. இதையடுத்து ஸ்டீபன் மீது போக்ஸோ வழக்கை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்த நபர் பள்ளி சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி