தேனியில் போதை தலைக்கேறிய ஆத்திரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோம்பை அமுல் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (44) என்பவர் கூலித்தொழில் செய்தி வருகிறார். தினமும் குடித்துவிட்டு மனைவி பழனியம்மாள் மற்றும் அவர் வீட்டில் வசித்து வந்த மாமியார் முத்தாம்மாளுடன் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்த மணிகண்டன் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி பழனியம்மாள் மற்றும் மாமியார் முத்தம்மாளை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.
இரண்டு பேரையும் கொலை செய்து விட்டு அங்கேயே இருந்துள்ளார். அப்போது வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பழனியம்மாளின் அண்ணன் பழனிமுத்துவை பார்த்த மணிகண்டன் அவரை அரிவாளைக் காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர் பல்லவராயன்பட்டி பகுதிக்குச் சென்ற மணிகண்டன் அங்கிருந்த குளத்தில் தான் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை தூக்கி எறிந்துவிட்டு, அந்த வழியாக சென்ற போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரொ; பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
மணிகண்டன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கோம்பை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வந்த பழனியம்மாளின் அண்ணன் பழனிமுத்து தனது தங்கை மற்றும் தாயாரை மணிகண்டன் கொலை செய்ததாக புகார் அளித்தார்.
இதை கேட்டு அதரிந்த காவலர்கள், காரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் இருந்த பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
மணிகண்டனை விசாரித்ததில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரைக் கைது செய்த கோம்பை போலீசார்,அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோம்பை அமுல் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (44) என்பவர் கூலித்தொழில் செய்தி வருகிறார். தினமும் குடித்துவிட்டு மனைவி பழனியம்மாள் மற்றும் அவர் வீட்டில் வசித்து வந்த மாமியார் முத்தாம்மாளுடன் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இரண்டு பேரையும் கொலை செய்து விட்டு அங்கேயே இருந்துள்ளார். அப்போது வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பழனியம்மாளின் அண்ணன் பழனிமுத்துவை பார்த்த மணிகண்டன் அவரை அரிவாளைக் காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர் பல்லவராயன்பட்டி பகுதிக்குச் சென்ற மணிகண்டன் அங்கிருந்த குளத்தில் தான் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை தூக்கி எறிந்துவிட்டு, அந்த வழியாக சென்ற போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரொ; பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
மணிகண்டன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கோம்பை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வந்த பழனியம்மாளின் அண்ணன் பழனிமுத்து தனது தங்கை மற்றும் தாயாரை மணிகண்டன் கொலை செய்ததாக புகார் அளித்தார்.
இதை கேட்டு அதரிந்த காவலர்கள், காரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் இருந்த பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
மணிகண்டனை விசாரித்ததில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரைக் கைது செய்த கோம்பை போலீசார்,அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.