ஆப்நகரம்

'மூஞ்சி மொகரைய பேத்துடுவேன்'... பெண் போலீசை கடுப்பாக்கிய டம்மி தாதா

சென்னை: மது அருந்திவிட்டு வாகனத்தை ஒட்டியதுடன் போலீசார் மிரட்டிய நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 24 Jun 2021, 9:05 pm
சென்னை புழலில் முக கவசம் அணியாத போதை ஆசாமி ஒருவர் சினிமா திரைப்பட பாணியில் நான் ரவுடியின் நண்பன் எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Samayam Tamil கோப்புப்படம்


சென்னை புழலில் காவலர்கள் வாகன சோதனை ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டியை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, பெண் போலீஸ் ஒருவர் கேட்டபோது தன் மீது வழக்குப்பதிவு செய்தால் வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன் என அவரை மிரட்டியதுடன் அங்குவந்த போக்குவரத்து போலீசாரையும் சினிமா பாணியில், '' தான் ரவுடி என்றும் வழக்குப்பதிவு செய்த அனைவரையும் ஒரு மணி நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன்'' எனவும் அந்த ஆசாமி மிரட்டினார்.


பின்னர் அவரிடம் மது பரிசோதனை செய்தததில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்த போலீசாருக்கு அவர் பாடியநல்லூர் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியதியுள்ளது.

அடுத்த செய்தி