ஆப்நகரம்

தண்ணி அடிச்சிட்டு இப்படியா கார் ஓட்றது? நடைபாதை பயங்கரம்- தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள்!

மது அருந்தி விட்டு, நடைபாதை மீது காரை ஏற்றி பொதுமக்களை கொல்ல முயற்சித்த இப்படிப்பட்ட நபர்களை என்ன செய்வது? சட்டங்களை எவ்வளவு தான் கடுமையாக்குவது என்று புரியவில்லை.

Samayam Tamil 19 Aug 2019, 11:55 am
சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். அதையும் மீறி ஹெல்மெட் அணியாமல் செல்வது, கூடுதல் சுமை ஏற்றுவது, அளவுக்கு அதிகமான நபர்களை கூட்டிச் செல்வது என விதிமீறல்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.
Samayam Tamil drunk person drove his car over pedestrians on a footpath in bengaluru
தண்ணி அடிச்சிட்டு இப்படியா கார் ஓட்றது? நடைபாதை பயங்கரம்- தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள்!


சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனாலும் சில கயவர்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை.

Also Read: சென்னை வந்த ரயிலில் பரபரப்பு- பொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர் பகுதியில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. திடீரென சாலையோரம் திரும்பியது. இதையடுத்து அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.

Also Read: கஞ்சா பிரச்சனையில் விளையாட்டு வீரர் வெட்டி கொலை! சினிமா பாணியில் நடந்த பயங்கரம்!

பின்னர் வேகமாக சென்று நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதி நின்றது. இதில் பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் அங்கிருந்த நபர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

Also Read: நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு- சிபிசிஐடி அதிகாரி திடீரென மாற்றம்!

இந்த காட்சிகள் அனைத்தும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி