ஆப்நகரம்

பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை: கண்ணை மறைத்த குடிவெறி!

திருநெல்வேலி அருகே பெற்ற மகனையே தந்தை குடிபோதையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Nov 2019, 10:57 am
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தை சேர்ந்தவர் முத்து. இவர் தனது மனைவியுடன் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து சண்டை போட்டு உள்ளார். இதனால் அவரது மனைவி ஒரு பெண் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
Samayam Tamil பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை


அரிசி வாங்கச் சென்ற சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு!

இவர்களது மகன் வேல்முருகன் வள்ளியூர் அருகே உள்ள யுனிவர்சல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்தார். வேல்முருகன் தனது தாயோடு செல்லாமல் வீட்டிலேயே தங்கி கல்லூரிக்கு சென்றுவந்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர் உயிரைப் பறித்த, எக்ஸ்பிரஸ் அவென்யூ...

இந்த நிலையில் வேல்முருகன் கல்லூரிக்கு இரண்டு நாள்களாக வராததால் அவரது நண்பர்கள் வீட்டிற்கு வந்து தேடும் போது வீட்டினுள் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது வேல்முருகன் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுகிழமை வேல்முருகன் வீட்டில் படுத்து தூங்கும் போது அவனது தந்தை முத்து கம்பால் அடித்து கொலை செய்து விட்டு வீட்டை பூட்டி விட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

அரிவாள் வெட்டு, சிதறிய ரத்தம், பயணிகள் ஓட்டம் - கொரட்டூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

அவரது தந்தையை தேடும் போது கும்பிகுளம் அருகே குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவனை ராதாபுரம் போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி