ஆப்நகரம்

கணவன், மனைவியை வெட்டி சாய்த்த இளைஞர்கள்..! ஈரோட்டில் பயங்கரம்

ஈரோட்டில் கணவன், மனைவி வீட்டி உறங்கிக்கொண்டிருந்தபோது போது வீடு புகுந்த கும்பல் ஒன்று அவர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 14 Nov 2020, 2:24 pm
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சிட்டப்புள்ளாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமசாமி(58) அருக்காணி(52) தம்பதியினர். இவர்களுக்கு மோகனா(31) என்ற மகளும், யுவராஜா என்ற மகனும் உள்ளனர். மோகனா திருமணம் முடிந்து கொடுமுடி அருகே கணவன் மற்றும் ஒரு பிள்ளையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தாய், தந்தையை பார்க்க மோகனா அடிக்கடி சிட்டப்புள்ளாம்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
Samayam Tamil file pic


இந்நிலையில், நேற்று வழக்கம்போல மோகனாவும், கணவர் பெருமாளும் ராமசாமியின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அருந்ததியினர் காலனி அருகே இளைஞர்கள் சிலர் மது போதையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த இளைஞர்கள் மோகனாவிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்து தகவலறிந்த ராமாசியும், அருக்காணியும் மகன் யுவராஜாவை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டபோது, ராமசாமி குடும்பத்தையும், மோகனா குடும்பத்தையும் இளைஞர்கள் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பெருமாள் மற்றும் மோகனா இருவரும் கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அக்கா, மாமாவை பார்ப்பதற்காக யுவராஜா நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்று விட, ராமசாமியும் , அருக்காணியும் பேரனுடன் சிட்டப்புள்ளாம்பாளையம் வீட்டில் உறங்கிவிட்டனர்.

இதையடுத்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ராமசாமியும், அருக்காணியும் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எதிரிகளான டிக்டாக் தோழிகள்..! ஆட்டம், பாட்டம், தகாத பழக்கம், மானம் போச்சு

தொடர்ந்து, வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்த போலீசார் மோகனாவுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில், பிடிபட்ட இளைஞர்கள் நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து ராமசாமியையும், அருக்காணியையும் வெட்டி படுகொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கைதான 7 பேரிடம் மேற்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அண்மையில் சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன்
சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் மாநிலம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுபோல, நேற்று கள்ளக்குறிச்சியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி