ஆப்நகரம்

கொரோனா விதி மீறல்: சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.

Samayam Tamil 10 Jul 2021, 7:00 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அனைத்து வகையான ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள் ஆகியவை வழக்கமான 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


அத்துடன், கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் வீட்டில் மனைவி, கீழ் வீட்டில் ஹவுஸ் ஓனர்... தகாத உறவால் அப்பாவி கணவன் கொலை

இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை டி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு சென்னை மாநகராட்சி ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அளவுக்கதிகமான வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்தாக எழுந்த குற்றச்சாட்டில் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

அடுத்த செய்தி