ஆப்நகரம்

'பேரனுக்கு தொற்று பரவிடுமோ'? தற்கொலை செய்துகொண்ட தாத்தா - பாட்டி...

பேரனுக்கு கொரோனா பரவிடுமோ என்ற பயத்தினால் வயதான தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 May 2021, 6:24 pm
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 70 வயது தம்பதியினர் தங்களது தொற்று பேரனுக்கு பரவக்கூடும் என்று அஞ்சியதால் ஓடிய ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


ராஜஸ்தான் மாநிலம் புரோஹித்ஜி கி தப்ரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹீரலால் பைர்வா (75) மற்றும் அவரது மனைவி சாந்திபாய் (70). இந்த தம்பதியரின் மகன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் தங்கள் 18 வயது பேரன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது. அதனால், இருவரும் வீட்டு அறையில் தனிமைப்படுத்தி கொண்டனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை (நேற்று) சம்பல் ஓவர் பிரிட்ஜ் அருகே டெல்லி - மும்பை லைன் பாதையில் ரயிலின் முன்பு குதித்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

மயக்கி, ஏமாற்றி பாலியல் தொந்தரவு... தமிழகம் முழுக்க பல பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை

இதையடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 174 (இயற்கைக்கு மாறான மரணம்) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொரோனா நெறிமுறையின்படி உடல்கள் இறுதி சடங்குகளுக்கு அனுப்பப்பட்டன.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்களிடம் இருந்து தங்களது ஒரே பேரன் மற்றும் பிற குடும்பத்தாருக்கு கொரோனா பரவக்கூடும் என்று அச்சப்பட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது.

அடுத்த செய்தி