ஆப்நகரம்

அண்ணியை திட்டாதீங்க... மகன் கண்டித்ததால் வயதான தம்பதி தற்கொலை..!

நெல்லை அருகே குடும்ப தகராறு காரணைமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 24 Sep 2020, 10:44 pm
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இளந்தோப்பை சேர்ந்தவர் மூக்கன்(70) இவரது மனைவி செல்வமணி(64). கூலித் தொழிலாளியான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
Samayam Tamil mookan couple


இரண்டாவது மகன் ராஜதுரை சில வருடங்களுக்கு இறந்து விடவே மூக்கன் தம்பதியும் ராஜதுரை மனைவி சாரதாவும் தனி வீட்டில் வசித்து வந்தனர். அவ்வபோது சாரதாவுடன் மூக்கனும் செல்வமணியும் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை முதல் மகன் சந்திர சேகர் தட்டி கேட்டுள்ளார். தம்பி மனைவி சாரதாவை நீங்கள் பொறுப்பாக பார்க்க வேண்டும் ஆனால் நீங்கள் அவள் கூட சண்டை போட்டால் சரியாக இருக்குமா என்று பல முறை எச்சரித்துள்ளார். ஆனால், அதையும் மீறி அடிக்கடி இது போன்ற சண்டைகள் நடந்துள்ளன.

அண்ணன் மனைவிக்காக மூத்த மகன் திட்டியதால் மனமுடைந்த மூக்கனும் செல்வமணியும் கடந்த ஞாயிற்று கிழமையன்று மாலையில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

திருவாரூர் 'பப்ஜி ' காதல்: ப்ரோ பிளேயரை கரம் பிடித்த நூப் கேர்ள்..!

சந்திரசேகர் தனது தாய். தந்தையை அக்கம்பக்கத்தில் தேடி வந்த நிலையில், இன்று காலையில் ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருவர் இறந்து கிடப்பதாக நாங்குநேரி காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், மூக்கனும் அவரது மனைவி செல்வமணியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரது உடல்களை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்துநாங்குநேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி