ஆப்நகரம்

வீடு நிறைய பணம் இருக்கலாம்... சுற்றி வளைத்த போலீஸ்... தருமபுரியில் பரபரப்பு

தருமபுரி அருகே அதிமுக தரப்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ.16.50 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை.

Samayam Tamil 28 Mar 2021, 2:49 pm
தருமபுரி மாவட்டம் அரூர் திருவிக நகரில் உள்ள ஆசிரியர் குமார் என்பவரின் வீட்டிலிருந்து மஞ்சள் பையில் கட்டி வீசப்பட்ட ரூ.16.50 லட்சம் பணத்தை எடுத்து சென்ற அதிமுகவை சேர்ந்த நேதாஜி என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து விசாரனை மேற்கொண்டனர்.
Samayam Tamil ஆசிரியர் குமார் வீடு


அப்போது, அதிமுகவை சேர்ந்த சரவணன், என்பவர் தன்னை வரவழைத்ததின் பேரில் ஆசிரியர் குமார் வீட்டிற்கு சென்றதாகவும், அந்த வீட்டில் இருந்து வீசப்பட்ட பணத்தை எடுத்துச் செல்லும் போது தேர்தல் பறக்கும் படையினரால் பிடிபட்டதாகவும் வருவாய் கோட்டாட்சியர் முத்தையனிடம் நேதாஜி தெரிவித்தார்.

இந்நிலையில், ஆசிரியர் குமார் என்வருடைய வீட்டினுள் பணம் இருக்கலாம் என்று அவருடைய வீட்டை சுற்றி வலைத்து டிஎஸ்பி தமிழ்மணி தலைமையிலான காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் வருமானவரித்துறை சேர்ந்த அலுவலர்கள் அங்கு சோதனையில் ஈடுபட உள்ளனர்.

கிராமிய பாடகி தற்கொலை முடிவு..! அதிர்ச்சியில் ராஜலட்சுமி ரசிகர்கள்...

தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்று பணப்பட்டுவாடா செய்ய இப்பகுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என பொதுமக்கள் இடையே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி