ஆப்நகரம்

காஞ்சிபுரம் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.. கடிதத்தில் பகீர் தகவல்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Mar 2023, 6:32 pm
வேலூர் மாவட்டம், காட்ப்பாடியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சுவேதா (18). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கிங்ஸ் என்ற தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech முதலாம் ஆண்டு படித்து வந்தார். தங்கும் விடுதியில் தங்கி பயின்று வரும் சுவேதா கல்லூரியில் சரிவர படிக்க வில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
Samayam Tamil kanchipuram news


இந்த நிலையில் சுவேதா நேற்று நள்ளிரவு கல்லூரி விடுதியில் தனது அறையில் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அப்போது, சுருக்கு கழுத்தை இறுக்கியதால் ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் துடித்து கொண்டிருந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தோழிகள் கல்லுரி நிர்வாகத்திடம் கூறி உடனே சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சுவேதாவை மயக்க நிலையில் மீட்டுள்ளனர். பின்னர் உடனடியாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஶ்ரீபெரும்புதூர் போலீசார் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்த மாணவி சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கல்லூரி விடுதிக்கு வந்த போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுவேதா தற்கொலைக்கு முயன்ற அறையில் இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் ''தனக்கு சரியாக படிப்பு வரவில்லை.. நான் தேர்வில் அரியரும் வைத்துள்ளேன் இதன் காரணமாக தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக மாணவி சுவேதா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாட்டியை கொன்ற பேத்தி.. விசாரணையில் மெல்ல மெல்ல தெரிய வந்த பயங்கரம்..!

மேலும் சுவேதாவின் பெற்றோரை சென்னைக்கு வரவழைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, கல்லூரி மாணவர்கள், நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி