ஆப்நகரம்

பொத்தி பொத்தி வளர்த்த மகள், போன இடம்.?! கண்ணீரில் பெற்றோர்

தஞ்சை அருகே இன்ஸ்ட்டா மூலம் காதலித்து வீட்டை விட்டு சென்ற மகள் மனம் மாறாததால் பெற்றோர் கவலை

Samayam Tamil 24 Nov 2020, 9:08 pm
தஞ்சாவூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனப்பிரியா . பள்ளி படிப்பை முடித்த இவரை அவரது பெற்றோர் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், கையில் இருந்த செல்போனுடன் இன்ஸ்ட்டா பக்கம் அடிக்கடி சென்று வந்த மோகனப்பிரியாவுக்கு பெங்களூரூவைச் சேர்ந்த சுந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil காதல் ஜோடி


அந்த பழக்கம் இன்பாக்ஸ் வரைக்கும் சென்று பின்னர் செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு வந்துள்ளது. பின்னர் வழக்கம்போல இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டுள்ளது. மகள் ஆசைப்பட்டதை போல பொறியியல் படிப்பில் சேர்த்துள்ளோம் என்று பெற்றோர் எண்ணிக்கொண்டிருக்க, மற்றொரு அறையில் காதலனுடன் கடலை போட்டு வந்த மோகனப்பிரியா கடந்த 12 ஆம் தேதி காதலனை தேடி காட்பாடிக்கு சென்றார்.

இருவருக்கும் அது முதல் சந்திப்பு என்றாலும், திருமணம் செய்துகொள்ளும் முடிவில் அப்பகுதியில் உள்ள கோயிலில் தாலி கட்டி தம்பதியாகியுள்ளனர். இதனிடையே, வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு போன மகள் இன்னும் வீட்டுக்கு வராததால் மோகனப்பிரியாவின் பெற்றோர் குடியாத்தம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ஜெயமாலா வாக்குமூலம் எதிரொலி: தலில்சந்தின் உறவினர் திடீர் தற்கொலை

அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் மோகனப்பிரியாவின் செல்போன் சிக்னல் மூலம் காட்பாடியில் அவர்கள் தங்கியிருந்ததை கண்டு பிடித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, வாழ்ந்தால் சுந்தரிடம் தான் வாழ்வேன் என்று விடாப்பிடியாக இருந்த மோகனப்பிரியா, பெற்றோருக்கு எதிராக மனு ஒன்றையும் அளித்தார்.

காதல் ஜோடி மேஜர் என்பதால் வேறு வழியில்லாமல், போலீசார் மோகனப்பிரியாவின் பெற்றோரை மட்டுமே சமாதானம் செய்து அனுப்பும் நிலை ஏற்பட்டது. ஆடம்பர செல்போன், லட்ச கணக்கில் செலவழித்து மகளை பொறியியல் படிப்பில் சேர்த்த பெற்றோர் கண்ணீருடன் வீட்டுக்கு சென்றதோடு, மகளின் காதலன் 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு பெங்களூருவில் சமையல் வேலை செய்து வருவதை எண்ணி மனம் நொந்தனர்.

அடுத்த செய்தி