ஆப்நகரம்

பாஜக பிரமுகர் கொலை வழக்கு : விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்!!

திருச்சி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி இன்று (புதன்கிழமை) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

Samayam Tamil 29 Jan 2020, 11:39 pm
திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு, எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், ஆதிதிராவிட நல தேசிய ஆணையத் துணைத் தலைவர் முருகன், சம்பவ இடம் மற்றும் விஜயரகு குடும்பத்தினரிடம் இன்ற நேரில் விசாரணை நடத்தினார்.
Samayam Tamil பாஜக பிரமுகர் கொலை வழக்கு : விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்


இதையடுத்து, விஜயரகு கொலை வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் அதிரடியாக ஏற்பட்டு வருகின்றன. விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில், மிட்டாய் பாபு உள்ளிட்டோர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாஜக பிரமுகர் கொலை, தீண்டாமை கொடுமை என வழக்குப் பதிவு

இதைத்தொடர்ந்து இவ்வழக்கின் முக்கிய திருப்பமாக, விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் ஆரோக்கிய தாஸ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டதை அடுத்தும், விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதையடுத்தும், இவ்வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம் தொடங்கிவிட்டது : கொளுத்திப் போடும் பொன்னார்!!

திருச்சி பாலக்கரை பகுதியில் பாஜக மண்டல செயலாளராக இருந்த விஜயரகு, கடந்த திங்கள்கிழமை (ஜன.27) காலை, காந்தி மார்க்கெட்டில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி