ஆப்நகரம்

சிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி: ஈரோடு மருத்துவமனை பெயரில் மோசடி

ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனை பெயரில், உடல் உறுப்பு தானம் செய்வதில் மோசடி செய்து வந்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 4 Jun 2019, 12:19 pm
சிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி வரை பணம் கிடைக்கும் என பிரபல ஈரோடு மருத்துவமனை பெயரில், அப்பாவிகளை ஏமாற்றி வந்த மோசடி கும்பலை குறித்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது
Samayam Tamil ஈரோட்டு மருத்துவமனை பெயரில் சிறுநீரகம் தானம் மோசடி
ஈரோட்டு மருத்துவமனை பெயரில் சிறுநீரகம் தானம் மோசடி


நாட்டில் மனித உறுப்புகளை திருடுவது, அது தொடர்பாக நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினம் தினம் இதுதொடர்பாக ஏதேனும் ஒரு புகார் காவல் நிலையங்களில் வழக்குகள் பதவு செய்யப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் பிரபலமான தனியார் மருத்துவமனை பெயரில், சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ. 3 கோடி தருவதாக சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகிகள், இதுதொடர்பாக புகார் அளித்தனர். அதில், மருத்துவமனை பெயரை பயன்படுத்தி மோசடி ஈடுபட்டு வருபவர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வரும் காவலர்கள், சிறுநீரகம் கேட்டு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பும் கும்பல் பதிவு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என கேட்டுள்ளனர். பிறகு மருத்துவமனை பெயரில் போலி முகவரியை துவங்கி, பேஸ்புக் பக்கத்தையும் உருவாக்கி அந்த கும்பல் செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய கும்பல் குறித்து அவர்கள் கொடுத்துள்ள ஈரோடு மருத்துவமனையின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, ஒரு பெண் பேசிய போது தான்இந்த மோசடி குறித்து மருத்துவமனைக்கு தெரியவந்தது.

இந்த கும்பல், மேலும் பல அப்பாவிகளை ஏமாற்றி பணம் பறித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால், இவர்களிடம் உடல் உறுப்பை பறிகொடுத்து யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் ஈரோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி