ஆப்நகரம்

பிறந்தநாள் இனிப்பு கொண்டு வந்த பணி பெண்ணுக்கு கிஸ் கொடுக்கும் அலுவலர்..!

திண்டுக்கல் அருகே பிறந்த நாளுக்கு இனிப்பு கொண்டு வந்த அலுவலக பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த அலுவலர் இடமாற்றம்

Samayam Tamil 18 May 2020, 5:46 pm
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் கோபிநாத். இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தனக்கு பிறந்தநாள் என்றுகூறி கையில் இனிப்புடன் கோபிநாத்தின் இருக்கைக்கு வந்தார்.
Samayam Tamil பிறந்தநாள் இனிப்பு கொண்டு வந்த பணி பெண்ணுக்கு கிஸ்


அப்போது கோபிநாத்துடம் பேசிக்கொண்டிருந்த மற்றொரு நபரை வெளியே அனுப்பிய கோபிநாத், அந்த பெண்ணை அறையின் ஓரமாக அழைத்துச் சென்று முத்தம் கொடுத்தார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமீப நாட்களாக வாட்சப்பில் வந்துள்ளது. இதையடுத்து கோபிநாத்துடன் விசாரணை நடத்திய பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜ், கோபிநாத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கொடூரம்..! எருக்கம் பால் கொடுத்தும், தரையில் அடித்தும் பெண் சிசுக்கொலை...

பெண்கள் வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகள் பாலியல் ரீதியாக ததுன்புறுத்துவது தொடர் கதைகள்தான் எனினும், அலுவலகத்துக்குள் சிசிடிவி பொறுத்தப்பட்டிருப்பதை கூட பொருட்படுத்தாமல் இப்படி சாமியார்களை போன்று சிலுமிஷத்தில் ஈடுபட்டு வேலைக்கு ஒலை வைத்துக்கொள்பவர்களின் நிலை கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

அடுத்த செய்தி