ஆப்நகரம்

போலி சாமியார் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்..!

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

Samayam Tamil 17 Jun 2021, 5:47 pm
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகாரை அடுத்து அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்


முன்னதாக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால், சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வருவதாக அவரை அங்கு சென்று கைது செய்யும் நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர்.

அதன்படி, நேற்று டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலி சாமியார் சிவசங்கர் பாபாவை ஆஜர் படுத்தினர். நீதிமன்ற நடவடிக்கைக்கு பிறகு சிவசங்கர் சிறையில் அடைக்கப்படுவார்.

ஆபாச பேச்சுக்கு யூடியூபில் கொட்டிய பணம்... பப்ஜி மதனின் வங்கி கணக்குகள் ஆய்வு..!


அவரை நீதிமன்ற காவலில் எடுத்து பாலியல் புகார் தொடர்பாக விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தவுள்ளனர். ஏற்கனவே சிவசங்கர் பாபாவின் செல்போன், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும் நிலையில் பல அதிர்ச்சிகரமான ஆதாரங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இரவு நேரங்களில் விடுதி மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றதாக குற்றசாட்டுகள் உள்ளன.

அடுத்த செய்தி