ஆப்நகரம்

பின்னணி பாடகி வாணி ஜெயராம் எப்படி இறந்தார்..? போலீஸ் பரபரப்பு தகவல்

படுக்கை அறையில் கீழே விழுந்து வாணி ஜெயராம் உயிரிழந்ததாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 4 Feb 2023, 4:47 pm
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் தனது இல்லத்தில் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மரணத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil vani jairam
vani jairam death


சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78). இவர் இன்று அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார். இந்த நிலையில், வாணி ஜெயராம் இறப்பு குறித்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், வாணி ஜெயராம் தனது படுக்கை அறையில் இருந்து வழுக்கு விழுந்து நெற்றியில் காயமுற்று இறந்து கிடந்ததாக தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, ஆயிரம் விளக்கு போலீசார் வாணி ஜெயராம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாணமாக சென்று வீட்டு கதவுகளை தட்டிய பெண் யார்?.. சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!

வாணி ஜெயராம் 1971 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் பிண்ணனி பாடகியான இருந்து வந்தவர். இதுவரை 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். அண்மையில் அவருக்கு குடியரசு தினத்தை ஒட்டி பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த பின்னணி பாடகையான தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் வாங்கியுள்ளார். வேலூரில் பிறந்த வாணி ஜெயராமன் முறைப்படி கர்நாடகா சங்கீதத்தை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி