ஆப்நகரம்

பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு மேலும் 340 நாட்கள் சிறை..!

நன்னடத்தை ஆணையை மீறிய பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை தண்டனை விதிப்பு

Samayam Tamil 22 Mar 2022, 4:33 pm
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil padappai guna


இந்நிலையில், பல என்கவுண்டர்களில் தொடர்புடைய ஏடிஎஸ்பி வெள்ளத்துரை காஞ்சிபுரத்தில் நியமிக்கப்பட்டதையடுத்து படப்பை குணா தலைமறைவாகினார். அவரை பல இடங்களில் தனிப்படையினர் தேடி வந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 25 இல் சரணடைந்தார்.

தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட படப்பை குணாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரைத்தார். அதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின்படி படப்பை குணாவை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் ( GOONDAS ) வைக்க கடந்த பிப்ரவரி 16 உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

உடலுறவின்போது தகராறு..? கள்ளக்காதலியை கொன்று போலீசில் வாக்குமூலம் கொடுத்த நபர்

இந்நிலையில், 19.03.2022 அன்று மேற்படி காவலில் இருந்து வந்த குணா ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட செயல்துறை நடுவர் அளித்திருந்த நன்னடத்தை உறுதிமொழி கடப்பாடு ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக 340 நாட்கள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி