ஆப்நகரம்

கொள்ளை மட்டும் அடிக்கல... ஆளுநர் மாளிகை பின்னால போய் பாருங்க..! சென்னை அதிர்ச்சி

சென்னை: கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட ரவுடி ராக்கப்பன் என்பவரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை கொலை சம்பவம் வெளிவந்த அதிர்ச்சி

Samayam Tamil 21 Mar 2021, 6:59 pm
சென்னை நந்தனம் பகுதியில் இயங்கி ஆர்எஸ்பி என்ற தனியார் மருத்துவமனைக்கு கடந்த 12ம் இரவு வந்த மர்ம கும்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கும்பல் மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் செவிலியரை கத்தி காட்டி மிரட்டி பத்து சவரன் நகையையும், மருத்துவரின் காரையும் கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றிருந்த மர்ம கும்பல் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
Samayam Tamil famous rowdy rakkappan arrested by special police team on double murder case
கொள்ளை மட்டும் அடிக்கல... ஆளுநர் மாளிகை பின்னால போய் பாருங்க..! சென்னை அதிர்ச்சி


தொடர்ந்து அவர்களது செல்போன் எண்களை டிராக் செய்ததில் அந்த கும்பல் சிவகங்கையில் பதுங்கியிருந்து தெரிய வந்தது. அங்கு வைத்து தனிப்படையினர் 6 பேரை கைது செய்தனர். மேலும், அந்த கும்பலின் தலைவனாக பிரபல ரவுடி ராக்கப்பன் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இந்த ராக்கப்பன் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன. அடிக்கடி ஜாமீனில் வெளி வரும் ராக்கப்பன் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி நந்தனம் மருத்துவமனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வழக்கில் கோட்டூர்புரம் அண்ணாதுரை என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால், பிடிபட்ட ராக்கப்பனிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு முன்னுக்குப்பின் முரணாக ராக்கப்பன் பதிலளித்துளளார். இந்நிலையில் போலீசாருக்கு சந்தேகம் வலுவானது. பின்னர் நடத்திய விசாரணையில், அண்ணாதுரையை அண்மையில்தான் கொலை செய்ததாக ராக்கப்பன் அதிர்ச்சி வாக்குமூலத்தை கொடுத்தார்.

அண்ணாதுரை கொலை பின்னணி

அதாவது, 2015 ஆம் ஆண்டில் ஆவடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகியான முருகன் என்பவர் அப்பகுதியில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற ஆனந்த் என்பவர் முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, அண்ணாதுரையிடம் அந்த வேலையை கொடுத்துள்ளார். இதையடுத்து, ரவுடி ராக்கப்பனை அணுகிய அண்ணாதுரை கவுன்சிலர் முருகனை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.

அதனையடுத்து 2015 ஜூலை மாதம் ராக்கப்பன் தனது கூட்டாளிகளுடன் கவுன்சிலர் முருகனை கொலை செய்துள்ளார். ஆனால், பேசியபடி ராக்கப்பனுக்கு அண்ணாதுரை காசு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட விரோதத்தினால் பழி வாங்க, கடந்த 9ம் தேதி அண்ணாதுரையை சந்தித்துள்ளார் ராக்கப்பன். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள இடத்தில் வைத்து அண்ணாதுரையை கொலை செய்ய ராக்கப்பன் முடிவு செய்தார்.

ஆனால், அப்போது அண்ணாதுரையுடன் அவரது நண்பர் தங்கபாண்டியனும் வந்ததால் விஷயம் கசிந்து விடக்கூடாதென்பதற்காக இருவரையும் கொலை செய்துள்ளார் ராக்கப்பன். தொடர்ந்து இருவரது உடல்களையும் அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் வீசியதாக ராக்கப்பன் தெரிவித்தார்.

இதையடுத்து, அண்ணாதுரை, தங்கபாண்டியன் இருவரது உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நந்தனம் மருத்துவமனையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் சிக்கிய ரவுடியிடம் இருந்து இரட்டை கொலை விவகாரமும் வெளியே வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி