ஆப்நகரம்

நண்பனை போல் நடித்து பணம், செல்போன் திருடிய வழிப்பறி கொள்ளையன்!

சத்தியமங்கலம் அருகே சிசிடிவி கேமிரா பொறுத்தும் பணி செய்து வருபவர் செளந்தரகுமார். இவரிடம் நண்பனை போல் நடித்து பழகிய பிரபல வழிப்பறி கொள்ளையன் அவரிடமிருந்த பணம், மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது!

Samayam Tamil 25 Jul 2019, 6:57 pm
சத்தியஙம்கலம் அருகே நண்பனை போல் நடித்து ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்து 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 15ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி கொள்ளையன் பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil நண்பனை போல் நடித்து ஏமாற்றி பணம், செல்போன் திருடிய வழிப்பறி கொள்ளையன்!
நண்பனை போல் நடித்து ஏமாற்றி பணம், செல்போன் திருடிய வழிப்பறி கொள்ளையன்!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆர்.எம்.பி நகரை சேர்ந்தவர் செளந்தரகுமார். இவர் சிசிடிவி கேமிரா பொறுத்தும் பணி செய்து வருகிறார். இவருக்கு சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மணி என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த டென்னீஸ் என்பவரை, மணி, சௌந்தரகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் டென்னீஸ், தனது வீட்டில் சிசிடிவி கேமிரா பொறுத்த வேண்டும் என சௌந்தரகுமாரை அழைத்துள்ளார்.

இதையடுத்து செளந்தரகுமார், புஞ்சைபுளியம்பட்டி சென்றுசெல்போன் மூலம் டென்னீஸை அழைத்துள்ளார். அப்போது டென்னீஸ், புஞ்சைபுளியம்பட்டி சந்தை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது டென்னீஸ் மற்றும் அவரது இரு நண்பர்கள் மதுபோதையில் இருந்தனர்.

உறைய வைக்கும் வன்முறை: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!!

அப்போது டென்னீஸ் தனது வீட்டுக்கு சிசிடிவி கேமிரா பொறுத்த இடம் பார்க்க வேண்டும் என கூறி, சௌந்தரகுமாரை அழைத்து கொண்டு டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாகனத்தை நிறுத்த செல்லி சௌந்தரகுமாரிடம் 5ஆயிரம் பணம் வேண்டும் என டென்னீஸ் மிரட்டியுள்ளார்.

ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என கூற டென்னீஸ் மற்றும் அவரது இரு நண்பர்களும் மது பாட்டிலால் செளந்தரகுமாரை தாக்கி விட்டு 5 ஆயிரம் பணம் மற்றும் 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

குழந்தை சிவப்பாக பிறந்ததால் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கொடூர கணவன்!

இது குறித்து புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் செளந்தரகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த டென்னீஸ் மீது ஆள்கடத்தல், வழிப்பறி, கொலைமிரட்டல் என சத்தியமங்கலம், திருப்பூர், கோவை உட்பட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி