ஆப்நகரம்

தென்காசி அருகே விவயசாய வேலைக்கு சென்ற முதியவர் காட்டு மாடு தாக்கி பலி..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் காட்டு மாடு தாக்கி விவசாயி உயிரிழந்ததையயடுத்து அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 8 Jul 2020, 11:06 pm
தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (71). இவரது விவசாய நிலம் புளியங்குடியில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ளது. இன்று சாகுல் ஹமீது விவசாய வேலைக்கு 2 தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு தனது விவசாய நிலத்துக்குச் சென்றுள்ளார் .
Samayam Tamil man killed by cow


அப்போது, தோட்டத்திதற்குள் சென்ற போது அங்கு மறைந்திருந்த காட்டு மாடு சாகுல் ஹமீதை கொம்பால் முட்டித் தள்ளி தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஊருக்குள் வந்து அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த புளியங்குடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்த சாகுல் ஹமீது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புளியங்குடியில் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் கர்ப்பமான நிலையில் சிறுமி தற்கொலை..! காரணம் போலீசா?

சம்பவம் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், கடையநல்லூர் வட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வனத்துறை சார்பில் உயிரழந்த விவசாயிக்கு பொது நிவாரணம் 4 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் எனவும் விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பதட்டமான சூழ்நிலை நிலவியது.

அடுத்த செய்தி